கோவை விமான நிலையம் அருகே நேற்று (நவ.02) இரவு ஆண் நண்பருடன் காரில் பேசிக்கொண்டிருந்த கல்லூரி மாணவி 3 இளைஞர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாணவியின் ஆண் நண்பரின் காரை மீட்டு கோவை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த காரில் இருந்த மாணவியின் துப்பட்டா உள்ளிட்டவை மீட்கப்பட்டுள்ளன.