தமிழகத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வணிகவரி மற்றும் பதிவுத்துறை வருவாய் பலமடங்கு அதிகரிக்கும் என மாநில வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் நேற்று (நவ., 11) நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுக்கு வணிகவரி மற்றும் பதிவுத்துறை சேவைகள் எளிதாகக் கிடைத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.