முதலமைச்சர்
விஜய் செய்தியாளர்களைச் சந்திக்க தயங்குவதைச் செய்தியாக்கியதற்காக, அரசு கேபிளில் 44ஆம் இடத்திலிருந்து 61ஆம் இடத்திற்குப் புதிய தலைமுறை தொலைக்காட்சியைப் பின்னுக்குத் தள்ளியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. முதலமைச்சரை கேள்விகேட்டு செய்தியை வெளியிட்டதற்கு புதிய தலைமுறை தொலைக்காட்சியை அரசு கேபிளில் பின்னுக்குத் தள்ளுவதுதான் தவெகவின் மாற்று அரசியலா? மக்களுக்கான ஆட்சியா? என்று எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பியுள்ளன.