டெல்லியில் வருகிற 8ஆம் தேதி நடைபெறவிருக்கும்
இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம் என
திமுக அறிவித்துள்ளது. "
இந்தியா" கூட்டணி தொடங்கியதிலிருந்து அதன் மையச் சக்தியாக
திமுக இயங்கியதாகவும்,
திமுக தலைவர்
மு.க.ஸ்டாலின் நாட்டு மக்களுக்கான முக்கியப் பிரச்சினைகளில் முதன்மைக் குரல் எழுப்பி வந்ததாகவும்
திமுக தெரிவித்துள்ளது. தேர்தலுக்குப் பின்,
காங்கிரஸ், திமுகவுக்கு இழைத்த துரோகத்தினால்
திமுக தொண்டர்கள் மனக்காயமுற்றுள்ளனர் என்றும் கூறியுள்ளது.