“காங்கிரஸ் - திமுக இடையே தொகுதி உடன்பாடு ஏற்படும்” என காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் நேற்று (மார்ச் 3) செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடர வேண்டும் என்ற எண்ணத்துடன் 2 கட்சிகளும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.காங்கிரஸ் அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தையை திமுகவுடன்தான் நடத்துகிறது. இதில் உடன்பாடு ஏற்படும்” என தெரிவித்துள்ளார்.