தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள ஆவல்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கார்த்திக் (28) நேற்று முன்தினம் இரவு உடலில் பலத்த காயங்களுடன் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொடூர கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.