மேற்கு ஆசிய போரால் சமையல் கியாஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் சமையலுக்காக மின்சாரத்தில் இயங்கும் இன்டக்ஷன் ஸ்டவ் பக்கம் தங்கள் கவனத்தை திருப்பி உள்ளனர். இதனால் அதன் தேவை அதிகரித்துள்ளது. இந்நிலையில், மின்சார அடுப்பு, அதற்கான பாத்திரங்கள், இன்டக்ஷன் ஹீட்டர் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்குமாறு உற்பத்தி நிறுவனங்களை வலியுறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.