புவனகிரி தாலுக்கா பரங்கிப்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட வல்லம் கிராம தொடக்கப்பள்ளியில் மழைநீர் தேங்கி நிற்பதால் மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.