வடக்குதிட்டை: நாடக மேடை திறப்பு விழா

68பார்த்தது
வடக்குதிட்டை: நாடக மேடை திறப்பு விழா
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே வடக்குதிட்டை ஊராட்சியில் அதிமுக சார்பில் நாடக மேடை திறப்பு விழா மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் ஜெயந்தி சங்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும் புவனகிரி எம்எல்ஏ அருண்மொழிதேவன் பங்கேற்று சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட நாடக மேடையை திறந்து வைத்தார். 

முன்னதாக அதே பகுதியில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து கட்டப்பட்ட சிமெண்ட் சாலையை திறந்து வைத்து மரக்கன்றுகள் நட்டார். மேலும் அப்பகுதியிலேயே கட்சி கொடி ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் அம்மா பேரவை மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரன், ஒன்றிய செயலாளர் சீனிவாசன், மாவட்ட நிர்வாகி வீரமூர்த்தி, புவனகிரி நகர செயலாளர் செல்வகுமார், தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் புவனகிரி கிழக்கு ஒன்றியம் ஆ.ஜெ.குருமூர்த்தி, கிளைக் கழக செயலாளர் ராஜா என்கிற ராஜேஷ் மற்றும் பழனி சேகர், ஞானவேல், அகிலபிரதாபன், புவனகிரி பேரூராட்சி கவுன்சிலர்கள் பாலமுருகன், ஜெயப்பிரியா, ரகுராமன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள், பாசறை சந்திரன் உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி