
பரங்கிப்பேட்டை: வாலிபர் மீது வழக்கு
பரங்கிப்பேட்டை பகுதியில் 17 வயது சிறுமிக்கு 26 வயது வாலிபருடன் பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். தற்போது சிறுமி 4 மாத கர்ப்பமாக உள்ளார். இது குறித்து தகவல் அறிந்த மகளிர் ஊர் நல அலுவலர் ஜெயா, சிதம்பரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், குழந்தை திருமணம் செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும், திருமணத்திற்கு உடந்தையாக இருந்ததாக சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் வாலிபரின் பெற்றோர்கள் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






































