கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற நடராஜர் கோவிலில், சிவகாமி அம்மனுக்கு சென்னையைச் சேர்ந்த பக்தர் சுப்ரமணியன் சுமார் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான 50 பவுன் தங்கக் காசு மாலையை பொது தீட்சிதர்களிடம் வழங்கினார். அவர்கள் சிறப்பு பூஜை செய்து அம்மனுக்கு அந்த மாலையை அணிவித்தனர்.