தமிழ்நாடு அரசு, வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக, அவர்களின் வீடுகளுக்கே சென்று அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட ரேஷன் பொருட்களை வினியோகம் செய்யும் தாயுமானவர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. கடலூர் மாவட்டத்தில், இன்று 4 ஆம் தேதி மற்றும் நாளை 5 ஆம் தேதி ஆகிய தேதிகளில் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வினியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.