கடலூர் கிழக்கு மாவட்ட கழகத்திற்கு உட்பட்ட மாநில, மாவட்ட அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், பூத் வாரியாக கழக அமைப்பு ஏற்படுத்துவது குறித்தும், சட்டமன்ற தொகுதிக்கு 10000 இளைஞர், இளம்பெண்களை கழக உறுப்பினர்களாக சேர்ப்பது குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.