கடலூர் மாவட்ட காவல்துறையில் பயன்படுத்தப்படும் அனைத்து வாகனங்களும் மாதந்தோறும் ஆய்வு செய்யப்படும். இன்று, 12.11.2025 அன்று, ஆயுதப்படை மைதானத்தில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் IPS, காவல்துறை வாகனங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாகனங்கள் முறையாகப் பராமரிக்கப்படுகின்றனவா என்றும், அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் தீயணைப்பு கருவிகள் சரியாக உள்ளதா என்றும் அவர் சோதனை செய்தார்.