கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு குறைவாக இருந்த நிலையில், இன்று காலை திடீரென கடும் பனிப்பொழிவு நிலவியது. இதனால், வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்குவதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறே வாகனங்களை ஓட்டிச் சென்றனர்.