கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மஞ்சகொள்ளை கிராமத்தில் உள்ள கோமதி அம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த 6 கிராம் தங்க தாலியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வெங்கடேசன் மருதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.