கடலூர்: மத்திய உளவுத்துறையில் வேலை

80பார்த்தது
கடலூர்: மத்திய உளவுத்துறையில் வேலை
மத்திய உளவுத்துறையில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய உளவுத்துறை அதிகாரி (ஏ.சி.ஐ.ஓ.,) பிரிவில் 3717 இடங்கள் உள்ளன. இந்த இடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதற்கு கல்வித்தகுதி ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. கூடுதலாக அடிப்படை கம்ப்யூட்டர் அறிவு பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18-27 (10.08.2025ன் படி) இருக்க வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு மூலம் தேர்தெடுக்கப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். 10.08.2025 கடைசிநாள் மேலும் விவரங்களுக்கு mha.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

தொடர்புடைய செய்தி