கடலூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வுகள் மார்ச் 2 ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இத்தேர்வை 248 பள்ளிகளைச் சேர்ந்த 15,019 மாணவர்களும், 15,020 மாணவிகளும் என மொத்தம் 30,039 மாணவர்கள் எழுத உள்ளனர். இதற்காக 161 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.