கடலூரில் இன்று (நவம்பர் 4) கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழ்நாட்டில் இன்று முதல் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 4) ஒரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது.