கடலூர் புதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையிலான போலீசார் மஞ்சக்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (39) என்பவர் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.