கடலூர்: அமைச்சரிடம் மனு அளிப்பு

81பார்த்தது
கடலூர்: அமைச்சரிடம் மனு அளிப்பு
கடலூர் மாநகராட்சி 34 வது வார்டு மணவெளி பகுதியை சேர்ந்த சின்ராஜ் (40 வயது) என்பவர் கடந்த ஐந்தாம் தேதி கடலூர் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட பெரும் வெள்ளப்பெருக்கில் சாவடி ஆற்றுப்பாலத்தில் தவறி விழுந்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். 

பின்னர் பத்து நாட்கள் கழித்து தீயணைப்பு துறையினர் சின்ராஜ் அவர்களின் உடலை இறந்த நிலையில் மீட்டெடுத்தனர். கடலூர் தேவனாம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டு எஃப் ஐ ஆர் போடப்பட்டுள்ளது. இறந்து போன சின்ராஜ் அவர்களுக்கு மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர். ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இறந்தபோன சின்ராஜ் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதி பெற்று தர வேண்டும் என்ற கோரிக்கையை இன்று கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன் தமிழக வேளாண்மை துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வத்திடம் மனு கொடுத்தார். அமைச்சர் மனுவை பரிசீலனை செய்து உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்‌.