கடலூர் அடுத்த கிளிஞ்சிக்குப்பத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி மனைவி அனுசுயா (65) கடந்த 13 ஆம் தேதி அன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை. அவரை பல இடங்களில் தேடியும் காணவில்லை. இது குறித்து அவரது மகன் பழனிசாமி அளித்த புகாரின் பேரில் ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல் போன மூதாட்டியை கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.