மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கடலூர் மாநகர அலுவலகத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில், ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாட்டை புறக்கணித்ததை கண்டித்து, வரும் 12ம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டம் கடலூர் மாநகர கழக செயலாளர் கே.எஸ். ராஜா தலைமையில், கடலூர் சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன் எம்எல்ஏ முன்னிலையில் இன்று நடைபெற்றது.