சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று (நவம்பர் 23) தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என கணித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதியிலும் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.