திருநெல்வேலி மாநகரம் மற்றும் மாவட்டத்தில் 7 குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த கண்ணபிரான்(எ) கந்தசாமி, திருச்சி மாவட்டம் ஜீயர்புரம் காவல் நிலைய வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் மத்திய சிறையில் இருந்து வந்தார். ஜீயர்புரம் காவல் நிலைய வழக்கில் பிணை பெற்ற நிலையில், திருநெல்வேலி தச்சநல்லூர் காவல் நிலைய வழக்கில் கைது செய்யப்படாமல் இருந்ததால், நேற்று (6. 11. 2025) கடலூரில் திருநெல்வேலி மாநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட உள்ளார்.