இந்தியா முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. கடலூர் வடக்கு மாவட்டம், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமஅத் சார்பில் மஞ்சக்குப்பம் மைதானம், ஈக்தா திடலில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்துகொண்டு சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.