கடலூர் மாநகராட்சியில் உலக தாய்மொழி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மேயர் சுந்தரி ராஜா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் பா. தாமரைச்செல்வன் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் பிரசன்னா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் இந்த உறுதிமொழி ஏற்கப்பட்டது.