கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி அடுத்த காரணப்பட்டு கிராமத்தில், வீட்டு
வேலை செய்யாததால் தந்தை திட்டியதால் மனமுடைந்த 14 வயது மாணவி பவிஷ்கா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி 9 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.