கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பைச் சேர்ந்த காவல் ஆய்வாளர் ஜெய்ஷங்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்தன. இதன் எதிரொலியாக விசாரணை நடத்தப்பட்டு, சரக டிஐஜி அளித்த பரிந்துரையின் பேரில், அவரை காவல்துறையில் இருந்து பணிநீக்கம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த நடவடிக்கை காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.