கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் அருகே 17 வயது சிறுமியை அவரது வளர்ப்பு தந்தை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும் தெரிகிறது. இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்ததை அடுத்து, சேத்தியாத்தோப்பு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில், சிறுமியின் வளர்ப்பு தந்தை மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.