கடலூர் அருகே, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளிக்குச் செல்லும் பேருந்தில் பயணம் செய்தபோது, நிறுத்தத்தில் பேருந்து நிற்காததால் ஓடும் பேருந்திலிருந்து குதித்து காயமடைந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இது குறித்து போலீஸார் ஓட்டுநர், நடத்துனரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் இறங்க வேண்டிய நிறுத்தங்களில் பேருந்துகளை முறையாக நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.