தமிழகத்தில் 717 மதுக்கடைகளை மூட முதலமைச்சர் உத்தரவிட்ட நிலையில், குறிஞ்சிப்பாடி தாலுகா கொத்தவாச்சேரியில் உள்ள அரசு மதுக்கடையை மூட உத்தரவு இல்லை. இதனால், அப்பகுதி பொதுமக்கள் கடையை பூட்டி, எதிரே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.