குறிஞ்சிப்பாடி அண்ணா நகரில் உள்ள பச்சைவாழி அம்மன் கோவிலில், பூஜை முடிந்து பூசாரி சென்ற பிறகு, மர்ம நபர்கள் கோவில் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதில் இருந்த சுமார் ₹7 ஆயிரம் ரொக்கப் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.