கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடலூர் சத்திய ஞான சபை செல்லும் வழியில் உள்ள உயர் மின் கோபுர விளக்கு மற்றும் சில இடங்களில் மின் விளக்குகள் எரியாமல் இருப்பதை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.