கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் இன்று (மே 21) இரவு வைகாசி மாத ஜோதி தரிசனம் மூன்று முறை காண்பிக்கப்பட்டது. இதில் கடலூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.