
நெய்வேலி: என்எல்சி செயலாக்க துறை இயக்குனர் பொறுப்பேற்பு
கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் திட்டமிடல் மற்றும் செயலாக்கத் துறையின் புதிய இயக்குநராக ராஜேஷ் பிரதாப் சிங் சிசோடியா தலைமை அலுவலகத்தில் பொறுப்பேற்றார். இவர் இதற்கு முன்பு பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் செயல் இயக்குநராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். புதிய இயக்குநருக்கு என்எல்சி இந்தியா நிறுவனத்தின் தலைவர் பிரசன்ன குமார் மேட்டுப்பள்ளி மற்றும் பிற இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.






































