கடலூர் மாவட்டம் வடலூர்-நெய்வேலி சாலை கண்ணுத்தோப்பு பகுதியில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண்ணின் உடல் பாதி புதைந்தும், முகம் சிதைந்த நிலையிலும் மீட்கப்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற வடலூர் போலீசார், உடலைக் கைப்பற்றி, அப்பெண் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என்ற கோணத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.