பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு காலனியில், செல்வராஜ் (50) என்பவரை, சின்னப்பன் மகன் சேதுதாஸ் (35) என்பவர், 'என் மனைவி பிரிந்ததற்கு நீதான் காரணம்' என்று கூறி கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் காயமடைந்த செல்வராஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காடாம்புலியூர் போலீசார் சேதுதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.