மதுரையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஸ்ரீதர், வடலூரைச் சேர்ந்த 17 வயது சிறுமியுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வந்துள்ளார். இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு சென்றபோது கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் நெய்வேலி மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீதர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.