கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து வடலூர் அடுத்த வானதிராயபுரம் கிராம மக்கள் சென்னை - கும்பகோணம் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் அப்பகுதியில் சிறிது நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.