
குடிப்பதை கண்டித்ததால் டிரைவர் தூக்கிட்டு தற்கொலை பரபரப்பு
பண்ருட்டி அருகே அம்மாபேட்டை பகுதியில் சக்திவேல் (30) என்பவர், குடிபோதையில் வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால், அதிகாலை 04:30 மணியளவில் மின்விசிறியில் சேலையால் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து புதுப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.








































