கடலூர் மாவட்டத்தில் 38 சிபிஎஸ்இ பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்காக 11 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று காலை சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கணிதப் பாடத்துடன் தொடங்கியது. இத்தேர்வை 2446 மாணவர்கள் எழுதியதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். தேர்வு மையங்களில் மாணவர்களுக்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.