சென்னையில் டாஸ்மாக் முறைகேட்டைக் கண்டித்து முற்றுகை போராட்டத்திற்குச் சென்ற பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்ததை தொடர்ந்து பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் கடலூர் மாவட்ட தொழில் பிரிவு தலைவர் முருகன் தலைமையில் 50 ற்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் காவல் துறையினர் அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.