கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திராசு கிராமத்தில் வசித்து வந்த மணி (65) என்பவர் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிரே வந்த தனியார் கூரியர் வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து பண்ருட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.