பண்ருட்டி அடுத்த திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று மாசி மக உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனையொட்டி ஸ்ரீதேவி, பூதேவியுடன் சமேதராக பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.