கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தொழுதூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய பெருமாயி, 10.11.2025 அன்று வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தபோது சிலிண்டர் வெடித்து உடல் முழுவதும் காயம் அடைந்தார். இராமநத்தம் போலீசார் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.