கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி (55). இவர் அப்பகுதியில் நேற்று (மே 8) இரவு பெய்த மழையின் காரணமாக அவரது உறவினர் ராமசாமி என்பவர் வீட்டில் மரம் விழுந்து இருந்தது.
அதனை அகற்றுவதற்காக சென்று மரத்தை அகற்றிக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கப்பட்டு கீழே விழுந்துள்ளார். இதனை அறிந்த அவர்கள் அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
மேலும் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அங்கு வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து இராமநத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.