திட்டக்குடி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செவ்வேரி கிராமத்தில் பொதுமக்களின் குறைகளைக் கேட்டறியும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான கணேசன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.