கடலூர் மாவட்டம் திட்டக்குடி சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று பகலில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வதிஷ்டபுரம் வெள்ளாற்று பாதையில் அனுமதி இன்றி கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற நரசிம்மன் (வயது 47) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.