கடலூர் மாவட்டம் கருவேப்பிலங்குறிச்சி அடுத்த ஜே. ஜே நகரைச் சேர்ந்த 17 வயது மாணவி சசிகலா, கடந்த 27 ஆம் தேதி வீட்டில் தூங்கிய நிலையில், மறுநாள் காலை காணாமல் போனார். அவரை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தாய் பானுமதி கருவேப்பிலங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சசிகலாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.